ஆன்லைன் செயலில் கடன் வாங்கியவருக்கு நிகழ்ந்த விபரீதம்

by Staff / 16-05-2024 01:45:29pm
ஆன்லைன் செயலில் கடன் வாங்கியவருக்கு நிகழ்ந்த விபரீதம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். இவர் ஆன்லைன் செயலி மூலம் கல்வி கடன் எடுத்துள்ளார். கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகும் செயலி சார்பில் பணம் கட்ட சொல்லி மிரட்ட பட்டதாகவும்.பணம் கொடுக்காததால் மாணவனின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு அனுப்பியதாகவும் கூறி நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

 

Tags :

Share via