சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை

by Staff / 24-05-2024 11:56:54am
சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் மாவட்ட வனப்பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தபோது, நக்சல்கள் பாதுகாபு படை வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சூடு மாலை வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், 7 நக்சல்கள் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Tags :

Share via