சென்னை கோட்டை ரயில் நிலையம்-மகள்களை காப்பாற்றி தாய் மின்சார ரயில் மோதி மரணம்

by Admin / 07-08-2023 10:30:36am
 சென்னை கோட்டை ரயில் நிலையம்-மகள்களை காப்பாற்றி தாய் மின்சார ரயில் மோதி மரணம்

 சென்னை திருவல்லிக்கேணியை சார்ந்த சித்ரா தனது இரண்டு மகளுடன் தி. நகர் உள்ள பிரபல  கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப அதற்காக கோட்டை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வேளச்சேரி செல்லும் ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது எதிரே வந்த மின்சார ரயில் கவனிக்காது கடந்து கொண்டிருந்த தன்னுடைய இரு மகள்களையும் தள்ளிவிட்டு, மின்சார ரயில் மோதி உயிர் இழந்தார். எதிர்பாராத இந்த விபத்தில் உயிரிழந்த சித்ராவின் உடலை கைப்பற்றி ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .தனது மகள்களை காப்பாற்றுவதற்காக தம் உயிரை ஈந்த தாயின் செயல் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது

 

 

Tags :

Share via