துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

by Staff / 27-05-2024 12:26:42pm
துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

ஊட்டி ராஜ்பவனில் ஆண்டு தோறும் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் மாநாடு நடைபெறும். அந்த வகையில், இன்று (மே 27) உதகை ராஜ்பவன் மாளிகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கும் இந்த பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை வேந்தர்களுக்கான மாநாடு இன்று நாளை (மே 28) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டில் தொடக்கம் மற்றும் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி தலைமை உரையாற்றுகிறார்.

 

Tags :

Share via