அட்டை கம்பெனியில் தீ விபத்து.. அமைச்சர் ஆய்வு..

by Staff / 29-05-2024 03:25:22pm
அட்டை கம்பெனியில் தீ விபத்து.. அமைச்சர் ஆய்வு..

தாம்பரம் நாகல்கேணியில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான அட்டை கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு இன்று (மே 29) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கிருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

 

Tags :

Share via