.80 ஆயிரம் பணத்துக்கா மனைவியை வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

by Staff / 29-05-2024 03:29:20pm
.80 ஆயிரம் பணத்துக்கா மனைவியை வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (29). மனைவியை பிரிந்த இவர், இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த புரோக்கர் அவருக்கு ஒருபெண் பார்த்து கொடுத்துள்ளார். பின்னர் 1½ பவுனில் நகை போட்டு அந்த பெண்ணை ராதாகிருஷ்ணன் திருமணம் செய்துள்ளார். முதலிரவு அன்று மாதவிடாய் எனக்கூறி நழுவியுள்ளார். மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை அங்கு போகிறேன் எனக்கூறி கம்பி நீட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் அந்த பெண்ணின் கணவர்தான் புரோக்கராக வந்து ரூ.80 ஆயிரம் கமிஷன் பெற்றுக்கொண்டு தனது மனைவியை திருமணம் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதே போல அவர் பலரை ஏமாற்றியிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via