ஆலங்குளத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் தங்கதுரை (48). இவர் சக போலீஸ் காரர்களுடன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த நவீன், கல்யாண சுந்தரம் ஆகிய 2 பேர் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். இதில் தங்கதுரை லேசான காயத்துடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரணை.
Tags : ஆலங்குளத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு