பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்ற கோரி பாஜக மனு 

by Editor / 30-05-2024 09:11:28am
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்ற கோரி பாஜக மனு 

சென்னையில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர்  கௌசல் கிஷோரை  தமிழக பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் நேரில் சந்தித்து தென்காசி மாவட்டத்திற்கு தேவையான முக்கியமான ரயில்வே திட்டங்களான செங்கோட்டையில் பிட் லைன் தென்காசி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்களுக்கு நீர் ஏற்றும் வசதி செங்கோட்டையிலிருந்து இரவு நேர ரயில்கள் சென்னைக்கு அதிகம் இல்லாததால் பொதிகை எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலை இரவு ஏழு முப்பது மணிக்கு மேல் செங்கோட்டையில் இருந்து புறப்படுதல் உள்ளிட்ட  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .மேலும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாகவும் திருநெல்வேலி - செங்கோட்டை செங்கோட்டை - விருதுநகர் ரயில் பாதையை இருவழி அகல ரயில் பாதையாக மாற்றி தர வேண்டும் மேலும் தென்காசி . கடையநல்லூர்,ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக  கூடுதல் ரயில் சேவை வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.மேற்கண்ட கோரிக்கைகளை ரயில்வே துறையினர் நிறைவேற்றி தரும் பட்சத்தில்  மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெற்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்ற கோரி பாஜக மனு 

Share via