சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளர் மாரிக்கண்ணன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளர் மாரிக்கண்ணன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி கண்ணன். வயது 44. இவர் 2022 ஆம் ஆண்டு முதல் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 வயதுடைய சிறுமி மாரிக்கண்ணன் மோட்டார் பைக்கில் ஆலம்பட்டிக்கும் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிலம்பட்ட பயிற்சியாளர் மாரிக்கண்ணனை கைது செய்தனர்.
Tags :