வடமாநிலநபருக்கு அடி உதை -2 பேர் கைது  

by Editor / 09-02-2024 08:34:39am
வடமாநிலநபருக்கு அடி உதை -2 பேர் கைது  

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வடக்கு வாசலில், பீகாரைச் சேர்ந்த மாசூன் என்ற இளைஞரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் பிளேடால் தாக்கியுள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்று அதிகாலையில் நடந்த இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதே போன்று தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல்நிலைய எல்லைக்குட்ப்பட்ட சுந்தரபாண்டியபுரத்தில்  குல்பி ஐஸ் வியாபாரம் செய்யும் சுனில் என்றவாலிபரை தாக்கி பணம் ,செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags : வடமாநிலநபருக்கு அடி உதை -2 பேர் கைது  

Share via