வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள்பலி.

by Editor / 04-02-2023 08:14:11pm
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள்பலி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை  முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். தைப்பூசத்தை ஒட்டி தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பெண்கள் குவிந்தனர். 4 பேர் இறந்த நிலையில் 12 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via