தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன் தொண்டர்களுக்கு கடிதம்

by Admin / 25-10-2024 05:43:31pm
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன் தொண்டர்களுக்கு  கடிதம்

 தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சூழ்நிலையை மாநாட்டிற்கான பணிகள் துரித கதையை நடந்து வருகின்றன இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன் தொண்டர்களுக்கு மூன்றாவது கடிதத்தை எழுதி உள்ளார். அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

வணக்கம்.

நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கை திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

 மாநாடு நிகழப்போகும் தருணம், நம் மனம் மற்றும் களவழாகத்திற்கு வெகு அருகில் வந்து விட்டது.

 உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்க போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை.

 திருவிழாவை கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி. சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.

 வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

 நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.

 என்று கடிதம் வாயிலாக தம் கழகத் தோழர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன் தொண்டர்களுக்கு  கடிதம்
 

Tags :

Share via