ரயில் தடம் புரண்டு விபத்து
பாகிஸ்தானில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஞாயிறு அன்று பயங்கர ரயில் விபத்து ஒன்று நடந்துள்ளது. ஹசாரா எக்ஸ்பிரஸ் ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த போது சஹாரா ரயில் நிலையம் அருகே 10 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :