ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை

by Editor / 24-10-2021 08:06:29pm
ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை

அரியலூர் அருகே முனியங்குறிச்சி கிராமத்தை சர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர் ரெட்டிபாளையம் ஊராட்சிமன்ற தலைவியாக இருந்து வருகிறார். இவருக்கும் இவரது கணவர் கணேசனுக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. ராஜேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்து கணவர் கணேசன் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த விக்கிரமங்கலம் போலீசார் ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோாதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஊராட்சிமன்ற தலைவி ராஜேஸ்வரிக்கு 2 மகனும் 1 மகளும் உள்ளனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமங்கலம் போலீசார் தீவிர விசாரனை நடத்திவருகிறார்.

 

Tags :

Share via