முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் இன்று: தலைவர்கள் மரியாதை
நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் வாய்பாய். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 16 அன்று, தனது 93வது வயதில் மரணமடைந்தார். இவரது 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, டில்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags :