நெருங்கும் பொங்கல் பண்டிகை மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம். 

by Editor / 06-01-2023 10:07:18am
நெருங்கும் பொங்கல் பண்டிகை மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம். 

மண்பானை சமையல் என்றாலே அதற்கென்று ஒருமவுசுண்டு.மண்பானை சமையலெக்கென்றே நாட்டில் ஏராளமான உணவகங்கள் உருவாகிவருகின்றன.உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்குமென்பதால் மண்பானை சமையலை ஏராளமானவர்கள் விரும்புவதால் அந்த தொழில் புரியும் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக சிறிய அளவில் மண்பானைகள் விற்பனையாகிவரும் சூழலில் இத்தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு அதிகளவில் மண்பாண்டப்பொருட்கள் விற்பனையாவது பொங்கல் பண்டிகைகள் மற்றும் கேரளமாநில் ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் மட்டும்தான்.தற்போது தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால்  குமரியில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் மண்பானை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பரிசு தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பு ஆகியவற்றை மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து  மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை‌யும்விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via