பெண்களுடன் ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்

by Staff / 02-06-2024 01:32:23pm
பெண்களுடன் ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போட்டிக்காம்பட்டியில் மகா காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முதல் நாளில் கரகம் ஜோடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் கூடினர். அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஆர்.பழனிச்சாமி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடந்து கொண்டார். அவர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் கரகாட்ட பெண்களுடன் திடீரென நடனமாட தொடங்கினர். அவர்களை தொட்டு ஆபாசமான செய்கைகளுடன் நடனமாடியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.இதையடுத்து கரகாட்ட பெண்கள் முகம் சுளித்த போதும் தொடர்ந்து அவர்களை கட்டியணைத்தபடி நடனம் ஆடினார். இதனால் கிராம பெண்கள் நடையைக்கட்டினர். தொடர்ந்து இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆளும் கட்சியில் பொறுப்பான இடத்தில் இருக்க வேண்டிய ஒரு கவுன்சிலர் இப்படித்தான் பெண்களிடம் நடந்து கொள்வாரா? என வீடியோவை பரப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via