கண்ணை மறைத்த காமம்-அண்ணனைக்கொன்ற தம்பி. 

by Editor / 02-06-2024 11:31:52pm
கண்ணை மறைத்த காமம்-அண்ணனைக்கொன்ற தம்பி. 

கர்நாடகா மாநிலம், சாமராஜநகரில் உள்ள சவுடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). அண்ணி மீது குமாருக்கு தீராத மோகம் இருந்து வந்துள்ளது. தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி தகாத உறவுக்கு அழைத்து வந்துள்ளார். தனது மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த தனது தம்பி குமாரை, பிரசாத் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இதில் நடந்த சண்டையில் குமார், கத்தியால் தனது அண்ணன் பிரசாத்தை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். தனது அண்ணனை கொலை செய்த குமாரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : கண்ணை மறைத்த காமம்-அண்ணனைக்கொன்ற தம்பி. 

Share via