நீட் தேர்வு - மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது? பிரியங்கா காந்தி, கேள்வி

by Staff / 07-06-2024 12:21:37pm
 நீட் தேர்வு - மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது? பிரியங்கா காந்தி, கேள்வி

 நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாக கசிந்தது. தற்போது தேர்வு முடிவிலும் முறைகேடு.. ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. இது ஒருபுறமிருக்க  ...மறுபுறம் மாணவர்கள் பலரும் இத் தேர்வால் தற்கொலை செய்து வருகின்றனர்.. லட்சக்கணக்கான மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது? முறைகேடு தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா? என்று  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via