தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல் .

by Staff / 29-02-2024 04:46:19pm
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல் .

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியை  சேர்ந்தவர் சசிகுமார் மனைவி சுபா தேவி சசிகுமாரின் தம்பியான தப்பி ஓடிய பாலசுப்பிரமணியன் (51) மேல கடையநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார், இவர் குடும்பத் தகராறில் தனது அண்ணியை ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் தேதி பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்த கடையநல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர்.இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்தனர் இந்த நிலையில் அவர் கழிவறைக்கு செல்வதாக கூறி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.தப்பியோடிய பாலசுப்பிரமணியனை தென்காசி மற்றும் கடையநல்லூர் போலீசார் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via