என்ஐஏ விசாரணை தேவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

by Editor / 10-02-2022 11:37:29am
என்ஐஏ விசாரணை தேவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

நமக்கு கோவிலாக இருக்கும் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம்; இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக காவல்துறை அடக்க வேண்டும்" தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு முகமை(NIA) விசாரணை நடத்த வேண்டும்.என்ஐஏ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்.
குண்டர் சட்டத்தில் சிறை சென்ற ஒருவர் நீட்க்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டு வீசினார் என்பது நகைச்சுவையாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் சதி இருக்கிறது.எப்.ஐ.ஆர்  பதிவு செய்வதற்கு முன், அவசர அவசரமாக போலீஸார் ஆதாரங்களை அகற்றியது ஏன் எனத் தெரியவில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

 

Tags : BJP state president Annamalai needs NIA probe

Share via