மது போதையில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த வாலிபர் படுகாயங்களுடன் மீட்பு..

by Editor / 08-06-2024 12:29:42am
மது போதையில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த வாலிபர் படுகாயங்களுடன் மீட்பு..

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியைச் சார்ந்த மகேந்திரன் என்பவர் ஆய்க்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பகுதியில் மது போதையில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது 7 ஆம் தேதி காலை சுமார் 10:30 மணி அளவில் அந்த வழியை சென்று கொண்டிருந்தவர் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த சுமார் 40 அடி உயரம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார் இதில் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு அலறியதை தொடர்ந்து அந்தப் பகுதியில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த ஆய்க்குடி காவல் துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்து நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு மகேந்திரனை கயிறு கட்டி மீட்டனர் இதன் தொடர்ச்சியாக படுகாயங்களுடன் இருந்த மகேந்திரன் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து சிகிச்சைக்காக அனுமதித்தனர் இது குறித்து ஆய்க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 12 மணிக்கு மதுபான கடைகள் திறக்கும் நிலையில் 10:30 மணிக்கு மது அருந்தி ஒருவர் கிணற்றில் விழுந்து சம்பவம் ஆய்க்குடி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

 

Tags : மது போதையில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த வாலிபர் படுகாயங்களுடன் மீட்பு.

Share via