விடுமுறை தினம் அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிவரும் பக்தர்கள்.

by Editor / 09-06-2024 10:36:53am
விடுமுறை தினம் அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிவரும் பக்தர்கள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். 

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை முதல் தற்போது வரை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் வரிசையில் நிற்காமல் செல்ல அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பக்தர்களுக்கு ஆங்காங்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : விடுமுறை தினம் அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிவரும் பக்தர்கள்.

Share via