எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என மக்களை கேட்டு முடிவெடுப்பேன்

by Staff / 12-06-2024 01:46:59pm
எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என மக்களை கேட்டு முடிவெடுப்பேன்


ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாடு எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என்பதை முடிவு எடுப்பதில் தர்மசங்கடமான சூழல் உள்ளது. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல. நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via