"ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்"

by Staff / 12-06-2024 01:41:25pm

சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 20 முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், காலை 10 மணிக்கு பதில் காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூடும் எனவும் ஜூன் 21, 22, 24 தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவாகும்.

 

Tags :

Share via