தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

தீபாவளிக்கு முன்தினமான அக்டோபர் 30, 2024ல் சொந்த ஊர் செல்ல இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். நேரடியாகவோ அல்லது ஐஆர்சிடிசி செயலி மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில் மார்க்கமாக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளிக்கு 4 மாதம் உள்ள நிலையில், முன்பதிவு செய்து டிக்கெட்டை உறுதி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இன்று முதல் முன்பதிவு செய்யலாம்