சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு..

by Editor / 08-11-2021 09:33:11pm
 சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு..

 

திருவெண்ணைநல்லூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த துலுக்க பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் மகன் செல்வகணபதி வயது 16 பிளஸ் 1 படித்து வந்துள்ளார்

 இவரை கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணவில்லை இதுகுறித்து செந்தில் முருகன் அளித்த புகாரின் பெயரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாலை துலுக்கபாளையம் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது

தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தீயணைப்பு துறையினர் மூலமாக செல்வகணபதி உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via