பைக் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி

by Staff / 06-07-2023 05:02:33pm
பைக் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி இன்று பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி ராஜன் இவரது சகோதரி இசக்கியம்மாள், அம்மா சரஸ்வதி, இவரது குழந்தை என 4 பேர் பைக்கில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
 

Tags :

Share via

More stories