வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

by Admin / 11-08-2021 02:58:24pm
வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

 

சிறுமியின் தாயார் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புஷ்பராஜ் மீது புகார் செய்தார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதாமேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (வயது 23) கூலி தொழிலாளி.
 
இவர் சம்பவத்தன்று மதுபோதையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

மேலும் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புஷ்பராஜ் மீது புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வாலிபர் புஷ்பராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.

கைதான அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via