சேலம் களரம்பட்டியில் வி‌ஷ பாட்டில் மூடியை கடித்த சிறுவன் உயிரிழப்பு

by Admin / 11-08-2021 05:02:07pm
சேலம் களரம்பட்டியில் வி‌ஷ பாட்டில் மூடியை கடித்த சிறுவன் உயிரிழப்பு

வி‌ஷ பாட்டில் மூடியை கடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், களரம்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் நந்தின் (வயது 3).

 இவனை, அவரது தாய் மகேஸ்வரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள தர்காவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுவன் தர்காவிற்கு வெளிப்பகுதியில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது, அங்கு சாலையில் கிடந்த வி‌ஷ பாட்டில் மூடியை எடுத்து கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அந்த பகுதியிலேயே சிறுவன் மயங்கி விழுந்தான்.

இதனைப் பார்த்த தாய் மகேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் நந்தின் பரிதாபமாக இறந்தான்.

மகனின் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via