நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 28ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், ஜூலை 4ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்.
Tags :