போலீசாரின் மன உளைச்சலை தவிர்க்க விழிப்புணர்வு... மதுரையில் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி..

by Admin / 12-08-2021 12:15:34pm
போலீசாரின் மன உளைச்சலை தவிர்க்க விழிப்புணர்வு... மதுரையில் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சிலம்பாட்ட பயிற்சி பள்ளியில் பயின்று வரும் முதல்நிலை காவலர் பாலமுருகன்
 
போலீஸாருக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவும்,  தற்கொலை முயற்சியை தடுக்கவும், முதல்நிலை காவலர் 8 மணி நேர சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் , நோபல் உலக சாதனைக்கு முயற்சி.
 
சமீபகாலமாக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மன உளைச்சலாலும்,  பல்வேறு பிரச்சினைகளும் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வகையில் , தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் எவ்வித தீங்கும் ஏற்படாது என்பதை உணர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ,  தொடர்ந்து எட்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை 7 மணி அளவில் தனது சாதனை முயற்சியை துவக்கிய பாலமுருகன் , நண்பகல் 3 மணி அளவில் நிறைவு செய்ய உள்ளார். அவரிடம் இது குறித்து கேட்டபோது,  சமீபகாலமாக அதிகரித்து வரும் மன உளைச்சலில் ஏற்படும் தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்கும் , காவலர்களின் உடற்கட்டு திறனை வெளிப்படுத்தவும்,  மது ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாதனை முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும்,  அடுத்த முயற்சியாக 30 மணி நேர தொடர் சிலம்பம் சுற்றி சாதனை செய்யும் முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும்   பாலமுருகன் தெரிவித்தார்.

 

Tags :

Share via