"3 ஆண்டு ஆட்சியை ஏற்று மக்கள் வெற்றியைக் கொடுத்துள்ளனர்" ஆர்.எஸ்.பாரதி பேட்டி

by Staff / 13-07-2024 03:00:27pm

3 ஆண்டு ஆட்சியை ஏற்று விக்கிரவாண்டி தொகுதியில் மக்கள் வெற்றியைக் கொடுத்துள்ளனர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சி மூன்று ஆண்டுகால ஆட்சி நடத்திய முறையை மக்கள் ஏற்றுக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் யார் எதிர்த்தாலும், தூற்றினாலும், நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நிரூபித்து காட்டியுள்ளனர். இந்த மகத்தான வெற்றியை தேடி கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via