பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்உயிரிழந்த சம்பவம்

by Editor / 12-08-2021 12:35:48pm
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்உயிரிழந்த சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சந்திரிக்கா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே சந்திரிக்காவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரிக்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து சந்திரிக்காவின் உடலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சக காவலர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்பிறகு சந்திரிக்காவின் உடல் அனைவரின் முன்னிலையிலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via