போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தீ வைப்பு

by Staff / 19-07-2024 05:34:32pm
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தீ வைப்பு

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு அதிகாலையில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர்.இதில் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து, தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை கே. கே. நகர் பகுதியில் தமிமுன் அன்சாரி என்பவரது வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பதுக்கியது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் அவரை கைது செய்து, அவர் வைத்திருந்த 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதில் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள் அந்த இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் 2 வாகனங்களும் எரிந்து நாசமானது. மேலும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் ஒருவர் கஞ்சா வியாபாரிக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் தற்போது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பான காருக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via