நீர்மட்டம் தாழ்வின் காரணமாக சுற்றுலா படகு சேவை ரத்து

by Editor / 24-07-2024 09:05:28am
 நீர்மட்டம் தாழ்வின் காரணமாக சுற்றுலா படகு சேவை ரத்து

கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலின் நீர்மட்டம் தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடல் திடீரென உள்வாங்கி இருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை ரத்து

Share via