நிவாரண நிதிக்கு எதிராக பதிவிட்டதற்காக 40 வழக்குகள் பதிவு

by Staff / 03-08-2024 02:42:12pm
நிவாரண நிதிக்கு எதிராக பதிவிட்டதற்காக 40 வழக்குகள் பதிவு

கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக இதுவரை மாநிலத்தில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உதவி அளிக்குமாறு போலி கணக்குகளை உருவாக்கி சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக் கண்காணிக்க சமூக வலைதளங்களில் சைபர் போலீசார் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via