பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை- தந்தை போக்சோ வில் கைது.

by Editor / 04-08-2024 05:04:22pm
பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை- தந்தை போக்சோ வில் கைது.

கரூர் ஈரோடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வயது 45.இவருக்கு மனைவி மற்றும் 17 வயது 15, 9- ஆகிய வயதுகளில் மூன்று பெண் மகள்கள் உள்ளனர்.கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மூன்று மகள்களுக்கும் எலக்ட்ரீசியன் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.எலக்ட்ரீசியனின் மனைவி பலமுறை எச்சரித்தும் எலக்ட்ரீசியன் திருந்தவில்லை.இதனால் தனது மூன்று மகள்களின் எதிர்காலம் கருதி எலக்ட்ரீசியனின் மனைவி, கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல்துறையினர், பின்னர் எலக்ட்ரீசியனை கைது செய்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மகளிர் காவல் துறையினர்.

 

Tags :

Share via