தெற்கு லெபனானில் தரைவழி மோதல்களும் வான்வழித் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்காவில் லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்புகள் குறித்த முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், தெற்கு லெபனானில் தரைவழி மோதல்களும் வான்வழித் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானில் உள்ள லிடானி ஆற்றைக் கடந்து, நபாட்டியா மாவட்டத்தின் யோமோர் அல்-ஷகிப், சவ்தார் அல்-ஷர்கியா போன்ற சுற்றுவட்டார கிராமங்களுக்குள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேல் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. நபாட்டியா மற்றும் அதன் சுற்றியுள்ள பல கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 2 அன்று மோதல்கள் தீவிரமடைந்ததில் இருந்து லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,355-ஐக் கடந்து தற்போது 3,370 என்ற எல்லையை நோக்கி உயர்ந்துள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 290-க்கும் மேற்பட்ட பெண்கள் அடங்குவர்..
மார்ச் 2 அன்று மோதல்கள் தீவிரமடைந்ததில் இருந்து லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,355-ஐக் கடந்து தற்போது 3,370 என்ற எல்லையை நோக்கி உயர்ந்துள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 290-க்கும் மேற்பட்ட பெண்கள் அடங்குவர்.அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ராஜதந்திர முயற்சிகள் வாஷிங்டனில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், களத்தில் இருதரப்பு மோதல்களும் போர் நிறுத்த மீறல்களும் தடையின்றி நீடிக்கின்றன.
Tags :



















