செல்போன் மோகம் - 3 இளைஞர்கள் பலி

by Staff / 22-05-2023 01:35:35pm
செல்போன் மோகம் - 3 இளைஞர்கள் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மூன்று இலங்கை தமிழர் இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. செல்போன் பார்த்து கொண்டே மூவரும் ஒரே பைக்கில் பயணம் செய்த போது கும்மடிபூண்டி புறவழி சாலையில் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீதி இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via