தலைமறைவாக இருந்த நக்சல் கமாண்டர் டெல்லியில் கைது

by Staff / 22-05-2023 01:33:25pm
தலைமறைவாக இருந்த நக்சல் கமாண்டர் டெல்லியில் கைது

தேசிய புலனாய்வு முகமை தடைசெய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணியின் (பிஎல்எஃப்ஐ) நக்சல் குழு கமாண்டர் தினேஷ் கோபேவை கைது செய்துள்ளது. முக்கியமாக ஜார்க்கண்டில் செயல்படும் பிஎல்எஃப்ஐ, மாவோயிஸ்டுகளின் பிளவுக் குழுவாகும். அவர் மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கோபேவை கைது செய்வது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக தலைமறைவாக இருந்த கோபேவை டெல்லியில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

Tags :

Share via