கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஆட்சியரிடம் மனு

by Staff / 06-08-2024 01:50:06pm
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த 21ஆம் தேதி மற்றும் 23 ஆகிய தேதிகளில் மகாராஜா மற்றும் தேன் தெனிலா ஆகிய இருவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம், வேம்பார் , வைப்பார் , மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கடல் பகுதியில் இருந்து சுமார் 60 கடல் நாட்டிகல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளிலும் ஏறி அவர்களது ஆவணங்களை சரிபார்த்துள்ளனர் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்துள்ள நிலையில் இலங்கை கடற்படையினர் தங்களது கடல் பகுதிக்குள் 2 படகுகளும் அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறி இரண்டு படகுகளையும் 22 மீனவர்களையும் கைது செய்து இலங்கை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தருவைகுளம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதை அடுத்து தருவைகுளம் விசைப்படகு மீனவர் சங்கம் மற்றும் மீனவர்கள் இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

Tags :

Share via