திகில் சம்பவம்.. 200 பேர் பலி

by Staff / 18-04-2023 11:45:00am
திகில் சம்பவம்.. 200 பேர் பலி

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களால் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். இந்த மோதல்களில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1800 பேர் படுகாயமடைந்தனர். வீடுகளுக்குள் ராக்கெட் லாஞ்சர்கள் ஊடுருவி, தோட்டாக்களால் பலர் உயிரிழக்கின்றனர். பல மருத்துவமனைகளும் அழிக்கப்பட்டுள்ளன, அங்குள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லை, சாப்பிட உணவும் இல்லாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர். மேலும், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், இந்தியாவில் இருந்து சூடானுக்கு பயணிப்பதை தவிர்க்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via