பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரர் சரமாரியாக வெட்டிக்கொலை
தேனி மாவட்டம் போடியில் பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராதாகிருஷ்ணன் தற்போது லாட்ஜி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தேனி தலைமை தபால் நிலையம் அருகே அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி அதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சரிந்து வந்த தேனி மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :