கடைக்கு சென்ற சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்
உத்தரப்பிரதேசத்தின் லோனி என்ற பகுதியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற 12 வயது சிறுமியை இரண்டு பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சகோதரனின் போனை உடைத்ததால், சிறுமியை அவரது தாய் திட்டியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி அங்குள்ள கடையில் மொபைலை சரிசெய்துள்ளார். தொடர்ந்து, இ-ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் சிறுமி தனியாக செல்வதை அறிந்து தனது நண்பனை அழைத்து அவரது வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags :