கார் கதவில் கழுத்து சிக்கி சிறுமி பலி

by Staff / 23-05-2023 12:49:27pm
கார் கதவில் கழுத்து சிக்கி சிறுமி பலி

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை அடுத்த அனந்தகிரியில் திருமண விழா நடந்தது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மணமக்கள் காரில் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் இந்திரஜா (9) என்ற சிறுமி அமர்ந்திருந்தார். இந்த நிலையில், திருமண விழாவை பார்ப்பதற்காக சிறுமி தலையை வெளியே நீட்டியுள்ளார். இதை கவனிக்காத கார் டிரைவர், ஜன்னல் கண்ணாடியை மூடினார். இதனால், கார் கண்ணாடிக்கு நடுவில் கழுத்து சிக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via