குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

by Editor / 30-09-2023 09:18:06pm
 குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சார்ந்த சுமார் 55 -க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று முன்தினம் 28 ஆம்  தேதி இரவு 10 மணிக்கு கடையத்திலிருந்து ஓன்று கூடி 11.30 மணியளவில் அன்பழகன் என்ற சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஏற்பாட்டில் புறப்பட்ட இவர்கள் இன்று ஊட்டியின் பல்வேறு பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்தில் 55 க்கும் மேட்ட சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர். இவர்கள் பயணித்த பேருந்து இறக்கத்தில் வந்து கொண்டிருந்த பொழுது பேரூந்து நிலை தடுமாறி சுமார் 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் 6.30 மணியளவில்  எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த வர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மேட்டுப்பாளையம் மற்றும் கோவை,குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பத்து நபர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 8  நபர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 3 பெண்கள் 4ஆண்கள் ஒரு சிறுவன் என 8 நபர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உடலை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன இதன் காரணமாக அங்கு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.


 

 குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!
 

Tags :  குன்னூர் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8பேர் உயிரிழப்பு!

Share via