அறுந்து கிடந்த மின் கம்பிகள்.. மருத்துவர் பலி

by Staff / 13-08-2024 04:42:37pm
அறுந்து கிடந்த மின் கம்பிகள்.. மருத்துவர் பலி

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் திங்கள்கிழமை இரவு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. அசோகா கார்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுந்தர் நகர் காலனியில் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் உபேந்திரா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 

Tags :

Share via