கிருஷ்ணகிரி சம்பவத்தில் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் சமீபத்தில் NCC பயிற்சி முகாமில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்கை விரைந்து முடிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடவடிக்கைகளை 15 நாட்களில் முடிக்கவும், 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
Tags :