ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சத்தில் கிராம மக்கள்.

by Editor / 26-08-2024 09:40:40am
ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சத்தில் கிராம மக்கள்.

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு கிராமத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் உலா வரும் ஒற்றை யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக, விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு வந்த ஒற்றை காட்டு யானையானது திரும்ப செல்லாமல் தற்போது அதே பகுதியில் சுற்றி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டும் அந்த முயற்சி பலன் அளிக்காமல் யானையானது அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதியில் உலா வரும் நிலையில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

 

Tags : ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சத்தில் கிராம மக்கள்.

Share via